கொரோனா - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காதது துரோகம் !
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றிவருகிறது. ** டாக்டர்கள், செவிலியர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். ** உறுதுணையாக போலீசார், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் செயலாற்றிவருகிறார்கள். ** ஆனால் வீட்டிலேயே இருந்து முடங்கிக் கிடந்த சாதாரண மக்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லை ! அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுத்தால் போதுமா ? வெறும் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் ? ** 67 நாட்கள் முடக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் கொடுக்காதது மிகப்பெரிய துரோகம் ஆகும். இதற்கு மத்திய அரசு நிதி அளிக்காமல் பிரதமர் மோடி வீண் பெருமை பேசுவதை மக்கள் ஏற்கவில்லை !