Posts

Showing posts from June, 2020

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் இடைநீக்கம் !

போலீஸ் விசாரணையில் வணிகர்களான தந்தை - மகன் பலியான வழக்கில்,  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஶதர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 4 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் !

பிஜேபி மீது ப.சிதம்பரம் - ராகுல்காந்தி தாக்கு !

சீனா ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது அகற்றுவீர்கள் என மோடி அரசை கேள்வி கேட்டால் பிஜேபி பதில் சொல்வதில்லை. மாறாக காங்கிரஸ் ஆட்சியை குறைசொல்கிறது! - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு. ** கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். அதை ஒழிக்க அவரிடம் எந்த திட்டமும் இல்லை ! - இளம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு.

ஊரடங்கு இனி தேவையில்லை ! மக்களிடம் கேட்டு முடிவு எடுங்கள் !

பொது ஊரடங்கு இனி தேவையில்லை என்பதே மக்கள் கருத்து ! முக கவசம் போன்ற கட்டுப்பாடுகளையும் மருத்துவ நடைமுறைகளையும் தொடரலாம் ! ஆனால், பொது ஊரடங்கினால் மக்கள் படும்பாடு பற்றி மருத்துவர்களுக்கு எப்படி தெரியும் ? மக்களின் தலைவிதியை மருத்துவர்கள் எப்படி தீர்மானிக்க முடியும் ? முக்கிய பிரச்சினைகளில்  பிரதமர் மோடியே எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மக்கள் திக்கற்று நிற்கும் இந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சிகளிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை  நடத்த வேண்டும் !

பொதுமக்கள் - வணிகர்களிடம் போலீசார் கனிவுடன் நடக்க வேண்டும்! - முதல்வர் பழனிசாமி

போலீசார் பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் கனிவுடன் நடந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் ! - முதல்வர் பழனிசாமி 

போலீஸ் விசாரணையில் தந்தை - மகன் பலியான வழக்கில் நீதி கேட்டு கடையடைப்பு !

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் செல்பேசி கடை நடத்திவந்தனர். ஊரடங்கை மீறி இரவு 8 மணிக்கு மேல் கடையைத் திறந்து வியாபாரம் செய்ததாக காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, உடல்நலக் குறைவால் அவர்கள் மரணம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது ! அவர்கள் இருவரும் காவல் நிலைய மாடியில் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் அதனால் உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அங்கு சென்ற உறவினர்கள், வணிகர்கள், கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் ! எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்து, கொலை வழக்கில் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது ! இருவரது இறுதி அடக்கத்தில் கனிமொழி எம்.பி. உட்பட வணிகர் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி 26 ம் தேதி தமிழக முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர் !

தந்தை - மகன் போலீஸ் விசாரணையில் மரணம் ! கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை !

சாத்தான்குளத்தில் செல்பேசி கடை நடத்திய தந்தை - மகன் போலீஸ் விசாரணையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக வணிகர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என கோரி இருவரின் உடலை உறவினர் வாங்க மறுத்தனர்! சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் துறைரீதியாக விசாரணை நடப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா- சித்த மருந்துகள் சோதனை செய்து பார்க்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி !

இந்திய மருத்துவத்திற்கு இந்தியாவிலேயே மதிப்பில்லை ! சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகள் அலோபதி -ஆங்கில மருந்துவத்தைவிட சிறந்தவை ! பக்கவிளைவுகள் இல்லாதவை. நீணடகால தீர்வு அளிக்கும் மூலிகைகள் சித்தா மருத்துவத்தின் மகத்துவமாகும். எல்லா வகை வைரஸ் காய்ச்சல் நோய்களுக்கும் சித்த மருந்துகள் உள்ளன. நிலவேம்பு கசாயம், கப சுர குடிநீர் போன்றவை இந்த கொரோனா காலத்தில் மிகவும் பயனுள்ள மருந்தாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்த மருந்துகள் மார்ச் மாதத்திலேயே கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கிருமி பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்! சித்தா மருந்துகளை சோதனை செய்து பார்க்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை சித்த மருத்துவர்  டாக்டர் சுப்பிரமணியம் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற  மதுரை கிளை நீதிபதிகள் , அலோபதி லாபியால் சித்த மருந்துகள் சோதனை செய்து பார்க்கப்படவில்லை என கண்டித்துள்ளனர்! மருத்துவ காப்பீட்டிற்கு பல ஆயிரம் கோடி   ரூபாய் செலவழிக்கும்போது, இதுபோன்ற சித்த ஆயுர்வேத புதிய மருந்துகளை பரிசோதித்துப் பார்ப்பதில்  மத்திய - மாநில அரசுகளுக்...

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மாமனார் விடுதலை !

உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மாமனார் உள்பட குற்றவாளிகள் விடுதலை ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. தந்தை விடுதலையை எதிர்த்து சங்கரின்  காதல் மனைவி கவுசல்யா உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் ! இருவரும் வேறு வேறு சாதி என்பதால், இதை விரும்பாத கவுசல்யாவின் தந்தை கூலிப்படை வைத்து சங்கரை கொலை செய்ததாக வழக்கு !

சீனா அத்துமீறினால் பதிலடி ! - ராஜ்நாத் சிங்

சீனா அத்துமீறினால் பதிலடி கொடுக்க முப்படைத் தளபதிகளுக்கு அனுமதி ! ரஷ்யாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு .

கொரோனா மறைந்தது என்ற செய்திதான் பெருமை சேர்க்கும் ! - மு.க.ஸ்டாலின்

கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என  முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா மறைந்தது என்ற செய்திதான் உங்களுக்கு நல்ல பெயர் உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு  மக்கள் - மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கேட்பது அவசியம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் !

கொரோனா - இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2.27 ஆக உயர்வு !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது ! குணமடைந்தோர் எண்ணிக்கை 2.27 லட்சம் ஆக உயர்ந்தது !

சூரியகிரகணம் தமிழகத்தில் தெரிந்தது !

சென்னை; சூரியகிரகணம் இன்று தமிழகத்தில் தெரிந்தது. மஞ்சள் நிறத்தில் தலைகீழ் பிறைபோல் -மோதிரம் போல்  காணப்பட்டது. இந்த கிரகணத்தினால் பாதிப்பு ஏதும்  இல்லை என எழுத்தாளரும் அறிவியலாளருமான நெல்லை சு.முத்து தெரிவித்துள்ளார் ! ராகு, கேது விழுங்குவதாக கூறுவது கற்பனை என டி.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா எப்போது ஒழியும் ? முதல்வர் பழனிசாமி பதில்

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தவே 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எப்போது கொரோனா ஒழியும் என்று அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்! மற்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு பற்றி இப்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை ! - முதல்வர் பழனிசாமி பேட்டி.

சீனா ஊடுறுவவில்லை ! -பிரதமர் பேச்சுக்கு விளக்கம்

இந்திய எல்லையில் சீனா ஊடுறுவவில்லை என பிரதமர் மோடி கூறியதை காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. சண்டைக்குப் பிறகு சீனா ஊடுறுவவில்லை என மோடி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வினோதமான விளக்கமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர்கள்கூறியுள்ளனர் !

இந்திய வீரர்களை பலி கொடுத்தது ஏன் ? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி !

இந்திய எல்லையில் சீன ஊடுறுவல் எப்படி நடந்தது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் ! - சோனியா காந்தி # ஊடுறுவல் நடக்கவில்லை என மோடி  கூறுவது உண்மையானால் 20 இந்திய  வீரர்கள் பலியானது எப்படி ? - ராகுல்காந்தி

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு நிலைபாட்டுக்கு கண்டனம்!

மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில்  பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக, மதிமுக கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு  தாக்கல் செய்துள்ள மத்திய அரசு 27 சதவீத ஒதுக்கீடு வழங்க சில நிபந்தனைகளுடன்  ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தி.க. தலைவர் வீரமணி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தமிழக நிலைபாட்டுக்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும் என தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வந்த பிறகு தமிழகத்தில் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கான மருத்துவ கல்வி வாய்ப்பு குறைந்துள்ளது. பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது !

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் - மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம்  யெச்சூரி,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகள் - ஆலோசனைகளை தெரிவித்தனர் ! இந்தியா அமைதியை விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறியதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார்.

சென்னையில் முழு ஊரடங்கு - ஆணையாளர் எச்சரிக்கை !

சென்னையில் முழு ஊரடங்கு 12 நாட்களுக்கு கடுமையாக அமல்படுத்தப்படும் ! வாலாஜா சாலையில் ஆய்வு செய்த காவல் ஆணையாளர் விஸ்வநாதன்  பேட்டி.

அமைச்சர் கே.பி.அன்பழகன் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின் !

அமைச்சர் கே.பி.அன்பழகன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும் ! - தொலைபேசியில் நலம்விசாரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து.

கொரோனா அச்சம் - சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள் !

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு  அமலுக்கு வந்தது ! போலீசார்  கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கொரோனாவுக்குப் பயந்தும் -வேலைவாய்ப்பு குறைந்து போனதாலும் - வீட்டுவாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில் பலர்  நேற்று தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு வாகனங்களில் குடும்பத்துடனும் - தனியாக  இரு சக்கர வாகனங்களிலும் கிளம்பிச் சென்றனர். இ -பாஸ் இல்லாதவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் ! இருந்தபோதும் பலர் செல்ல சோதனைச் சாவடிகளில் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். சொந்த ஊர் செல்வோருக்கு அவர்களின் அவல நிலை உணர்ந்து அரசு உதவ வேண்டும் எனவும்               போலீஸ் கெடுபிடிகள் இல்லாமலும் உணவு ஏற்பாடு,  கொரோனா  சோதனைகள் செய்யும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது !

கொரோனா காலத்தில் போர் வெறி தடுப்போம் !

இந்தியா - சீனா போருக்கு இது நேரமில்லை. லடாக் எல்லைப் பிரச்சினை, இமாசலப்பிரதேசம், நேபாள எல்லைப் பிரச்சினை ஆகியவை இந்தியா - சீனா சம்பந்தப்பட்டவை. இரு நாட்டு அரசுகளும் நினைத்தால் சண்டையை நிறுத்த முடியும் ! சமாதான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வருவது ஆறுதல் அளிக்கிறது. கொரோனா மக்களை கொத்துக் கொத்தாக பலி கொடுக்கும்  நேரத்தில் போரைத் தூண்டி, பதற்றத்தை   ஏற்படுத்துவது மனித குல   விரோத செயலாகும். அமைதி ஏற்பட வேண்டுமானால் வீர வ சனம் பேசி  சவால் விடுவதை நிறுத்த வேண்டும்! போர் என்பது முன்பு போல் எளிதாக இருக்காது. பலநூறு மைல் தாண்டி அழிக்கும் ஏவுகணைகள், புல் பூண்டுகூட இல்லாமல் அழிக்கும் அணு ஆயுதங்கள் இருக்கும் வரை பல லட்சம் மக்களை பலி கொடுத்தாலும் வெற்றி யாருக்கும் கிடைக்காது ! சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு.  இருப்பினும் இது காந்தியின் தேசம் ! இந்தியாவின் சமாதானத்தின் குரல் முதலில் ஓங்கி ஒலிக்கட்டும் !

இந்தியாவில் 1.94 லட்சம் பேர் குணமடைந்தனர் !

கொரோனா -இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7390 பேர் குணமடைந்தனர் .  334 பேர் பலி ! மொத்தம் இதுவரை 1.94 லட்சம் பேர் நலம் பெற்றனர் ! பலி எண்ணிக்கை 12 ஆயிரம் பேரைத் தாண்டியது ! # தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது ! சென்னையில் ஒரே நாளில் 12 பேர் மரணம் !

பிரதமர் மோடி - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு !

இந்தியா -சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார் !

லடாக் எல்லையில் சீனா அத்துமீறல் - 20 இந்திய வீரர்கள் பலி !

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் பலி ! இந்திய ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு. பதிலடி கொடுத்ததில் சீன வீரர்கள் 43 பேர் மரணம் என தகவல் !

லடாக் - இந்திய சீன எல்லையில் மோதல்; தமிழக வீரர் பலி !

லடாக் - இந்திய சீன எல்லைப்பகுதியில் இரு தரப்பு ராணுவ வீரர்கள் மோதலில் தமிழக வீரர் பழனி உட்பட 3 வீரர்கள்  மரணம் ! ராணுவ வீரர் பழனி இராமனாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர். புதிய வீடுகட்டி புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்ள வருவதாக குடும்பத்தினரிடம் கூறியவர் வரவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துவிட்டார் !

சென்னை - ஊரடங்கு பகுதிகளில் ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு !

சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் ! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுதேடி வழங்க ஏற்பாடு !

இந்த முழு ஊரடங்கையாவது முழுமையாக பயன்படுத்த வேண்டும் !- மு.க.ஸ்டாலின்

முழு ஊரடங்கு என்பது வீண் புரளி என்று கூறிய முதல்வர் பழனிசாமி, இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கையாவது முழுமையாக பயன்படுத்தி கொரோனாவை தமிழக அரசு ஒழிக்க வேண்டும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

கொரோனா உச்சம் தொடுகிறது ! சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு !

கொரோனா தொற்று சென்னையில் உச்சத்தை தொட்டிருப்பதாக மருத்துவ  நிபுணர்கள் குழு முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்துள்ளது. இது விரைவில் குறையத் தொடங்கும். மேலும் கொரோனா 2வது அலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளனர் ! # சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது !

வீண் விமர்சனம் செய்ய வேண்டாம் ! - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் இரவு பகலாக உழைத்து வருகிறோம். தயவு செய்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீண் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் ! - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்.

எதிர்க்கட்சி தலைவர்களுடன் அமித்ஷா நாளை ஆலோசனை !

டெல்லியில் கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்து கட்சி தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார் ! தமிழகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றி முதல்வர் பழனிசாமி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தலாமே ?

இந்தியாவில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் !

இந்தியாவில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் ! மத்திய சுகாதாரத் துறை தகவல். தமிழகத்தில் ஒரேநாளில் 1000 பேருக்கு மேல் குணமடைந்தனர் ! # ஒரே நாளில் 38 பேர் மரணம் !

அதிமுக எம்.எல்.ஏ. பழனி மருத்துவமனையில் சிகிச்சை !

அதிமுக ஶபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவரது உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி தொலைபேசியில்  விசாரித்தார் ! முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் விசாரித்தார் !

பிஜேபி தலைவருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் !

இடஒதுக்கீட்டுக்கு பிேஜபி ஆதரவாக நிற்கும் என்று அதன் தேசிய தலைவர் நட்டா என கூறியுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ள அவர், இதனை மத்திய பிஜேபி அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுகவும் தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீடு தொடர்பாக, திமுக, அதிமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின் மருத்துவ கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடியிடம்  பிஜேபி தலைவர் நட்டா வலியுறுத்த வேண்டும். மேலும் அனைத்து இடஒதுக்கீடுகளையும் அரசமைப்பின் 9ம் அட்டவணயில் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் !

திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் என்ன ஆச்சு ?

' ஒன்றிணைவோம் வா ' என்ற திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக முழுவதும் திமுகவினர் மூலம் செய்துவந்தார் ! * தொலைபேசி மூலம் வந்த கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டதாக கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. * அவ்வாறு தொடர்பு கொண்ட சிலருக்கு வெறும் ஆட்டோமேடிக் பதிவுசெய்யப்பட்ட குரல்கள் ஒலிப்பதாகவும்  அதனால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.  '' அரசு உதவி செய்யவில்லை என்றுதான் திமுக அறிவித்த தொலைபேசியை தொடர்பு கொண்டோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது '' என அவர்கள் கூறுகிறார்கள் ! * டி.ஆர்.பாலு தலைமையில் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த 1 லட்சம் பொதுமக்களின் புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டதாக  தெரியவந்துள்ளது !

மக்களை அரண்போல் காக்க வேண்டும் ! - மு.க.ஸ்டாலின்

சென்னையில் கொரோனா பாதித்த        பகுதிகளில் அரண் போல் காக்க வேண்டும். மக்களுக்கு வேண்டிய உதவிகளை ச் செய்து அரசு நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்ற உணர்வை ஊட்ட வேண்டும் !  - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

பச்சை மண்டலங்களில் பீதி ஏற்படுத்த வேண்டாம் !

சிவகங்கை மாவட்டம் போன்ற பச்சை மண்டலங்களில் புதிய தொற்று என்று பீதி கிளப்பும் செய்தி வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தி , சோதனை செய்து,  தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு சிகிச்சை என்று போட்டால் போதாதா ? இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருந்து தியாகம் செய்த மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் பீதிக்கு ஆளாக்க வேண்டாம் ! எதிர்க்கட்சிகளும் கொரானா பற்றி பீதி கிளப்பும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் !

முழு ஊரடங்கு திட்டம் இல்லை ! - முதல்வர் பழனிசாமி

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்   முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பரப்பப்படும்  தகவல் தவறானது. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர்  மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ! - முதலவர் பழனிசாமி எச்சரிக்கை.

கொரோனா - தமிழக அரசு வெளிப்படைத்தன்மை !- முதல்வர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் ஆகவில்லை ! * கொரோனா பாதிப்பு, மரணம், குணமடைந்தோர் பற்றிய தகவல்களை வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு வெளியிட்டுவருகிறது. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை ! - முதல்வர் பழனிசாமி விளக்கம்.

ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் திமுக பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது !

திமுக முக்கிய நிர்வாகி ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெற்றது. கொரோனா பாதிப்புடன் அவர் மரணம் அடைந்ததால் உடல் பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் உறைகளால் சுற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பெட்டியில்  வைக்கப்பட்டது. மயான குழியில் கயிறுகட்டி மெதுவாக இறக்கப்பட்டது. இது போலவே கொரோனாவால் மரணம் அடைந்த அனைத்து அனைத்து நபர்களின் உடல்களையும் கண்ணியத்துடன் உறவினர் முன்னிலையில்   அடக்கம் செய்யப்பட வேண்டும். சமூக இடைவெளியுடன் இந்த இறுதிச் சடங்கு அவரவர் மத முறைப்படி  அடக்கம் செய்யப்பட வேண்டும். இதில் உயர்வு - தாழ்வு பாகுபாடு காட்டக் கூடாது !

ஜெ.அன்பழகன் மறைவு - முதல்வர் பழனிசாமி இரங்கல் !

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் அழகிரி, இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் !

எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் !

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் ! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைமுறைப்படுத்திய 'ஒன்றிணைவோம் வா ' திட்டத்தில் கொரோனா நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கிவந்தார் ! களத்தில் மக்கள் பணியாற்றியதால் கொரோனா தொற்றால் பாதிக்க ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள், தொண்டர்கள்  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் அனைத்து 10 ம் வகுப்பு மாணவர்களும் பாஸ் ! - முதல்வர்

தமிழகத்தில் பெற்றோர் வேண்டுகோள் ஏற்றும், கொரோனோ பரவல் நீடிப்பதாலும் 10 ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் ! * காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் 80 சதவீதம், வருகைப் பதிவு  20 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் ! ** முதல்வர் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார் ! ** புதுவை மாநிலத்தில்  முதல்வர் நாராயணசாமியும் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளார் ! தமிழக கல்வி, பாட முறை புதுவையிலும் பினபற்றப்படுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்க ! - உச்சநீதிமன்றம்

* புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 15   நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் ! * ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்! - மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

கொரோனா ஒழிப்பு போரில் நிச்சயம் வெல்வோம் ! - முதல்வர்

கொரோனா ஒழிப்பு போரில் நிச்சயம் வெல்வோம் ! முதல்வர் பழனிசாமி நம்பிக்கை !

செய்திவாசிப்பாளர் - நடிகர் வரதராஜன் மீது வழக்கு ! விளக்கம் அளித்து மீண்டும் வீடியோ !

கொரோனா சிகிச்சை - படுக்கைகள் இல்லை என தவறான தகவலைப் பரப்பியதாக  செய்திவாசிப்பாளர் - நடிகர் வரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ** தனது அனுபவத்தை வீடியோ வாட்ஸ் - அப் மூலம் தனது நண்பர்களுக்கு  மட்டும் பகிர்ந்ததாக விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அரசு குறித்து புகார் எதுவும் கூறவில்லை. தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் மத்திய - மாநில அரசுகளைப் புகழ்ந்து  மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் !

10ம் வகுப்பு தேர்வு - உயர்நீதிமன்றம் கண்டிப்பு !

மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் - தமிழகத்தில் 10ம் வகுப்பு  பொதுத் தேர்வு  ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது  என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு ! ** ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை ! ** விசாரணை 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

கோவில்களில் வழிபாடுகள் நடந்தால்தான் கொரோனா ஒழியு ம் !

மற்ற மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் திறப்பதில் ஏன் தாமதம் ? கடவுளுக்கு நிபந்தனை போடாதீர்கள் ! ** கொரோனா முற்றிலும் ஒழிய வேண்டுமானால் பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்களில் வழிபாடுகள் நடக்க வேண்டும் !

கொரோனா தடுப்பு - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

கொரோனா தடுப்பு - சொல்லில் அல்ல, செயலில் காட்டுங்கள் ! பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் ! - தமிழக முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

இந்தியா -சீனா எல்லைப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை !

லடாக் பகுதியில் இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது ! இதனைத் தொடர்ந்து  இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், தொடர்ந்து சமாதான பேச்சு நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது !

8 வழிச்சாலை அமைப்பதில் அவசரம் ஏன் ? -மு.க.ஸ்டாலின்

கொரோனா காலத்தில் விவசாய நிலங்களில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய - மாநில அரசுகள் அவசரப்படுவது வேதனை அளிக்கிறது ! - மு.க.ஸ்டாலின் அறிக்கை.

கொரோனா - மரணம் அடைந்தவர் உடலை அவமானப்படுத்திய ஊழியர்கள் !

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை நபர் மரணம் அடைந்தார். அவரது உடலை சுகாதாரத் துறை ஊழியர்கள் மயானக் குழியில் குப்பையைப் போல் அலட்சியமாக தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது ! இந்த வீடியோ இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது மனிதாபிமானமற்ற கொடூர செயலாகும். இதற்கு கொரோனா பற்றி அச்சுறுத்தும்  வகையில் ஊடகங்களில் செய்தி வெளியிடுவதும் காரணம் ! யாருக்கு வேண்டுமானாலும் மரணம் வரலாம், கொரோனா நோய் வரலாம் ! எனவே அஞ்சி ஓடக்கூடாது. இறந்தவர் அவர் உயிரோடு இருப்பது போல் அவரது உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்யவோ  - தகனம் செய்யவோ வேண்டும் !

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவி !

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் !

கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வரும் 7ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் !

கொரோனா தடுப்பு - 5 அமைச்சர்கள் குழு !

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு ! முதல்வர் பழனிசாமி அமைத்தார்.

எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை - முதல்வர் விசாரித்தார் !

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று செயற்கை சுவாசம் தேவைப்பட்ட அவரின் உடல் நிலை இன்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து முதல்வர் பழனிசாமி விசாரித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று   பார்த்து நலம் விசாரித்தார் !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சம் பேர் !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சம் பேர் ! குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது !

மும்பையில் புயலுக்குப் பின் கன மழை -வெள்ளம் !

நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரை கடந்தது ! மும்பையில் இப்போது பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் இம்மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது !

என்றென்றும் வாழும் கலைஞரின் கொள்கை - கோட்பாடு !

தமிழர் நலன்,  இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை போன்ற முற்போக்கு கொள்கைகளை தமிழகத்தில் தமது எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிறந்த ஆட்சி  மூலம் ஓங்கச் செய்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் இன்று ! பெரியார் - அண்ணா வழியில் என்றென்றும் வாழும்  அவரது கொள்கை - கோட்பாடு !

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை !

லடாக் பகுதியில் இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை முற்றுகிறது ! சமாதான பேச்சுவார்த்தைக்கும் முயற்சி.

இந்திய பொருளாதாரம் - பிரதமர் மோடி நம்பிக்கை !

இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் ! பிரதமர் மோடி உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25,000 ஐ தாண்டியது !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது !

கொரோனா - அதிகமானோர் குணமடைந்த தமிழகம் ! - முதல்வர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து அதிகமான பேர் குணமடைந்துள்ளனர் !  - முதல்வர் பழனிசாமி 

கருப்பர் இன இளைஞர் கொலை - அமெரிக்காவில் போராட்டம் !

அமெரிக்காவில் கருப்பர்  இன இளைஞர் படுகொலையைக் கண்டித்து  நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது ! மின்னசோட்டா மாகாணத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் ( 46 ) என்பரை கழுத்தில் முட்டிக்காலால் அமுக்கி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை முக்கியம் !

நாட்டு வளர்ச்சியில் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் - மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொறுப்பு உள்ளது ! கொரோனா பாதித்த இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனையும் முக்கியம். ஆனால் மத்திய - மாநில அரசுகள் இதுவரை எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்தியே வந்திருக்கின்றன ! ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட், இ.யூ.முஸ்லிம் லீக், திரினாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்,  தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. மத்திய பிஜேபி அரசோ மாநில அதிமுக அரசோ எதிர்க்கட்சிகளின் குரலை செவிமடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது ! தமிழகத்தில் மே 31ம் தேதி  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படக் கூடாது , கொரோனாவால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு 7500, 5000 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகளுக்கு வலியுறுத...

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு ! 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்.

தமிழகத்தில் பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கின !

தஞ்சை, சிவகங்கை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன ! நீண்ட நாட்களுக்குப் பிறகு - சுகாதார நிபந்தனைகளை பூர்த்தி செய்து பயணிகள் பேருந்தில் சென்றனர்.