கொரோனா அச்சம் - சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள் !

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு  அமலுக்கு வந்தது !
போலீசார்  கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த கொரோனாவுக்குப் பயந்தும் -வேலைவாய்ப்பு குறைந்து போனதாலும் - வீட்டுவாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில் பலர்  நேற்று தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு வாகனங்களில் குடும்பத்துடனும் - தனியாக  இரு சக்கர வாகனங்களிலும் கிளம்பிச் சென்றனர்.
இ -பாஸ் இல்லாதவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் ! இருந்தபோதும் பலர் செல்ல சோதனைச் சாவடிகளில் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
சொந்த ஊர் செல்வோருக்கு அவர்களின் அவல நிலை உணர்ந்து அரசு உதவ வேண்டும் எனவும்               போலீஸ் கெடுபிடிகள் இல்லாமலும் உணவு ஏற்பாடு,  கொரோனா  சோதனைகள் செய்யும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா