கொரோனா காலத்தில் போர் வெறி தடுப்போம் !

இந்தியா - சீனா போருக்கு இது நேரமில்லை. லடாக் எல்லைப் பிரச்சினை, இமாசலப்பிரதேசம், நேபாள எல்லைப் பிரச்சினை ஆகியவை இந்தியா - சீனா சம்பந்தப்பட்டவை.
இரு நாட்டு அரசுகளும் நினைத்தால் சண்டையை நிறுத்த முடியும் ! சமாதான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வருவது ஆறுதல் அளிக்கிறது.
கொரோனா மக்களை கொத்துக் கொத்தாக பலி கொடுக்கும்  நேரத்தில் போரைத் தூண்டி, பதற்றத்தை   ஏற்படுத்துவது மனித குல   விரோத செயலாகும்.
அமைதி ஏற்பட வேண்டுமானால் வீர வ சனம் பேசி  சவால் விடுவதை நிறுத்த வேண்டும்!
போர் என்பது முன்பு போல் எளிதாக இருக்காது. பலநூறு மைல் தாண்டி அழிக்கும் ஏவுகணைகள், புல் பூண்டுகூட இல்லாமல் அழிக்கும் அணு ஆயுதங்கள் இருக்கும் வரை பல லட்சம் மக்களை பலி கொடுத்தாலும் வெற்றி யாருக்கும் கிடைக்காது !
சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை தடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு.  இருப்பினும் இது காந்தியின் தேசம் ! இந்தியாவின் சமாதானத்தின் குரல் முதலில் ஓங்கி ஒலிக்கட்டும் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா