முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும்
தொழிலாளர் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு தொடர்ந்து அதிமுகவில் துரோகம் நடப்பதாக கூறப்படுகிறது!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்! மேலும் அவர் மீது லஞ்சம் வாங்கியதாக அவரது உதவியாளரே புகார் கூறியுள்ளார். இதனை மறுத்து நிலோபர் கபில் பேட்டி அளித்துள்ளார். முதல்வராக இருந்த பழனிச்சாமி மீதும் திமுக ஊழல் புகார் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்!
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா 5 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. தொடர்ந்து ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினத்தையட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமைமிக்க ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், வடகொரியா மறுநாள் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை கண்டு கொள்வது கிடையாது. இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மே...
Comments
Post a Comment