ஊடகப் பார்வை !
******
ஜீ தமிழ் டிவியில் சத்யா தொடரில் சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையத்தில் தந்தை - மகன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து காட்சி ஒளிபரப்பானது ! சித்திரவதை செய்வதை கதாநாயகி சத்யா தடுத்து சண்டை இடுகிறாள்...
அதில் காவல் நிலையத்தில் கைதி சித்திரவதையை தடுக்கும் ஏ.சி.- காவல் இணை ஆணையராக நடித்த ஆகாஷ் ( நீதானே என் பொன் வசந்தம் தொடர் கதாநாயகன் ) சிறப்பு தோற்றத்தில் வருகிறார் !
அவர் பேசும் '' போலீசைப் பார்த்து பொதுமக்கள் ஏன் பயப்பட வேண்டும் ? கிரிமினல் ( குற்றவாளிகள் ) தான் பயப்பட வேண்டும் ! " என்ற வசனம் அருமை ! சமூக அக்கறையுடன் துணிச்சலான காட்சி
எடுத்த இயக்குனர்
பாராட்டுக்குரியவர் !
- மீராப்பிரியன்
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா 5 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. தொடர்ந்து ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினத்தையட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமைமிக்க ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், வடகொரியா மறுநாள் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை கண்டு கொள்வது கிடையாது. இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மே...
Comments
Post a Comment