ஊரடங்கு அறிவித்து விட்டு காய்கறி - பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதாக அரசு கூறினாலும் கிராமங்களில் அந்த வசதி இருப்பதை அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ கண்காணிக்கவில்லை!
காரைக்குடி அருகே உள்ள கிராமங்களில் இந்த நிலை தான்.
ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகளைத் திறந்தது ஏன் ? மக்கள் எப்படி அங்கு வருவார்கள் ?
கொரோனா பற்றி அச்சுறுத்தி மக்களை வெளியில் வராதீர் என கூறுவோர் அவர்களுக்கு என்ன வசதிகள் செய்துள்ளனர் ? மின்சார அளவீடு செய்வது கூட பொது மக்களே செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயமே அல்ல! சம்பந்தப்பட்ட துறையினருக்கு என்ன தான் வேலை ?
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா 5 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. தொடர்ந்து ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினத்தையட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமைமிக்க ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், வடகொரியா மறுநாள் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை கண்டு கொள்வது கிடையாது. இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மே...
Comments
Post a Comment