தளர்வு இல்லாத ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் சாதாரண ஏழை மக்கள், சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்.
கொரோனா தொற்று நோயைக் குறைப்பதற்கு ஊரடங்கு தீர்வு அல்ல. வேண்டுமானால் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தலாம்.
மேலும் ஆங்கில மருத்துவத்தையே நம்பிக் கொண்டு இருக்காமல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ
முறைகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தினால் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா
ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா 5 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. தொடர்ந்து ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினத்தையட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமைமிக்க ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், வடகொரியா மறுநாள் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை கண்டு கொள்வது கிடையாது. இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மே...
Comments
Post a Comment