காங்கிரஸ் செய்யும் தவறு என்ன ?

பொருளாதார பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை, மக்கள் விரோத மதவாத சட்டங்கள் போன்ற காரணங்களால், மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக நாட்டில் பல போராட்டங்கள் நடைபெற்றாலும் காங்கிரஸ்  அதைப் பயன்படுத்தி, மக்கள் ஆதரவைத் திரட்டத் தவறிவருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது!
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இன்று காங்கிரஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தலைவர்களான மம்தா பானர்ஜியோ  மாயாவதியோ  -ஏன் கூட்டணி கட்சியான திமுக தலைவர்களோ கூட கலந்துகொள்ளவில்லை.
கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கலந்துகொண்டது வரவேற்புக்குரியது.  தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா, அகமது பட்டேல் சிந்திப்பார்களா ?
- மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா