Posts

உ.பி.லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார் ! அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு 2.0 திட்டம் ! சென்னை கிண்டியில் முதலீட்டாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
ஊடகப் பார்வை ! ****** ஜீ தமிழ் டிவியில் சத்யா தொடரில் சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையத்தில் தந்தை - மகன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து காட்சி ஒளிபரப்பானது ! சித்திரவதை செய்வதை கதாநாயகி சத்யா தடுத்து சண்டை இடுகிறாள்... அதில் காவல் நிலையத்தில் கைதி சித்திரவதையை தடுக்கும் ஏ.சி.- காவல் இணை ஆணையராக நடித்த ஆகாஷ் ( நீதானே என் பொன் வசந்தம் தொடர் கதாநாயகன் ) சிறப்பு தோற்றத்தில் வருகிறார் ! அவர் பேசும் '' போலீசைப் பார்த்து பொதுமக்கள் ஏன் பயப்பட வேண்டும் ? கிரிமினல் ( குற்றவாளிகள் ) தான் பயப்பட வேண்டும் ! " என்ற வசனம் அருமை ! சமூக அக்கறையுடன் துணிச்சலான காட்சி எடுத்த இயக்குனர் பாராட்டுக்குரியவர் ! - மீராப்பிரியன்
காரைக்குடி- இலுப்பைக்குடி பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரை திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்!
தமிழ் மொழியில் கற்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை ! ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதி.
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
தமிழ்நாடு டெல்டா மண்டலத்தில் ஹைட்ரொ கார்பன் திட்டம் தொடங்க இருப்பதை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்! - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.