Posts

Showing posts from August, 2018

கடன்- விவசாயிகள் பெயரை மட்டும்தான் வெளியிடுவீர்களா? மத்திய தகவல் ஆணையம் கேள்வி

சிறிய அளவில் கடன் பெறும் விவசாயிகள் வெளியிடும் அரசு, ரூ.50 கோடிக்கும் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் பெயரையும் வெளியிட வேண்டும் என்று மத்திய தவகல் ஆணையம் மத்திய அரசை கடுமையாக விளாசியுள்ளது.  விவசாயிகள் சிறிய அளவிலான தொகையை கடனாக பெற்று திரும்ப செலுத்தாத போது அவர்கள் பெயரை பொதுத்தளத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று வேண்டுமென்றே திரும்ப செலுத்தாதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.  வங்கிகளில் ரூ.50 கோடிக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பொதுமக்கள் மத்தியில் வெளியிடுங்கள் என்று நிதி அமைச்சகம், மத்திய புள்ளியல்துறை மற்றும் திட்ட அமலாக்கம், பாரத ரிசர்வ் வங்கி ஆகியவைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவில், கடன் பிரச்சனையால் உயிரைவிடும் விவசாயிகள் பணக்காரர்களை போல் நாட்டை விட்டு ஓடவில்லை. மெத்தப்படித்த தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று திரும்பி செலுத்தாமல் நாட்டை ஏமாற்றி வருகிறார்கள் என கடுமையாக விளாசியுள்ளது.  மேலும், பொதுமக்களின் பணத்தையும், நட்டின் ...

சமூக செயற்பாட்டாளர்கள் கைது- நாடுமுழுவதும் கண்டனம்!

மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தையடுத்து தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினர் நடுவே நடந்த கலவரம் தொடர்பாக புனே போலீசாரின் முறையற்ற  கைது நடவடிக்கைகள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் ஆக. 28ம் தேதி போலீஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  கைதான 5 இடதுசாரி ஆதரவாளர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத் துக்காகவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர்கள் என்று தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடந்த கலவர வழக்கு, பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில்  மேற்படி 5 பேர் வீடுகளில் புனே போலீஸார் திடீர் சோதனை நடத்தி அவர்களைக்  கைது செய்துள்ளனர்.  ஆந்திர மாநிலத்தைச் ...

அடித்தட்டு மக்கள்- பெண்கள்- மாணவர்களுக்கான நலத்திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி!

Image
 திமுக தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக கோலோச்சியவர். பிற அரசியல்வாதிகளை போல சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றும் இவர் பாணி இல்லை. செய்ய முடிந்ததை சொல்வார். அதை செய்தும் முடிக்கும் அசாத்திய துணிச்சலும், உழைப்பும் அவரிடம் இருந்தன. கருணாநிதி மிகப்பெரிய சாதனையாளர் என்று கூறுவார்கள். ஆனால் கடந்த பல வருடங்களில் அந்த சாதனைகளை மக்களிடம் திமுகவினர் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை.  அப்படி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனைகள்-   தமிழகத்தில் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி 1967 பொதுத் தேர்தலிலில் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது. வென்ற தொகுதிகள் 138 இடங்கள். அக்கட்சியின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை திமுக அப்போது படைத்தது. 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். 1969 முதல் 1971 வரைய...