Posts

Showing posts from April, 2018

உலமாக்கள்மற்றும் பணியாளர்கள் நல வாரிய நலத்திட்ட உதவிகள்!

 உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ் தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியுடையவராவர்.  உறுப்பினார்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினருக்கு ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.  வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்: கல்வி உதவித்தொகை (10ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை அவரவர் பாடப்பிரிவி...

ஹைதராபாத் மெக்கா பள்ளி குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு விடுதலை- நீதிபதி ராஜினாமா!

ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  கடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.  இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தீர்ப்பு இன்று (16-4-2018 ) என்ஐஏ நீதிமன்றம் வழங்கியது. தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து ரவீந்திர ரெட்டி த...